காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை
குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத
குழுக்களை தடுக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ
கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை
நடத்திவருகின்றனர்.
தலிபான்
பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி
தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை
மீட்டுவருகின்றனர். அந்நாட்டின் ஹார், பேட்ஹிஸ், ஹிரேட் மாகாணங்களை சேர்ந்த
59 தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம்
சரண் அடைந்தனர்.

No comments:
Post a Comment