
புது தில்லி: மகாத்மா காந்திக்கு பாரத்
ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி என்று கூறியுள்ளது.
மகாத்மா
காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு இன்று விசாரணைக்கு
வந்தது.
மனுவை விசாரித்த உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, மகாத்மா காந்தி, நாட்டின் தந்தை.
அவரை மக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அது விருது மற்றும்
எந்தவிதமான அங்கீகாரத்துக்கும் அப்பாற்பட்டது.
அதே சமயம், மனுதாரரின் உணர்வுக்கு
நாங்கள் மதிப்பளிக்கிறோம். இது குறித்து அரசிடம் முறையிடுங்கள் என்று கூறி
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment