
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று
தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளின்
திமில்களைப் பற்றி வீரர்களும் சூரத்தனம் காட்டினர். ஆனாலும் பல காளைகள்
அவர்களை மிஞ்சி திமிறி ஓடின.

இந்நிலையில், சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவற்றின் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டது.
அப்போது களம் கண்டுவிட்டு காளை வெளியேறும் வழியே, காளை
பிடித்து செல்ல நின்று கொண்டிருந்த ஸ்ரீதரை அவ்வழியே வந்த மற்றொரு காளை
முட்டியது. இதில் அவரது வலது பக்க வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து
ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக
அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதர் செல்லும்
வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பி.இ சிவில் பட்டதாரியான ஸ்ரீதர்
சமீபத்தில் சட்ட கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பியதால் அதற்கு
விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment