 
                
சென்னை
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை 
தவிர்த்து பிற பகுதிகளில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு 
கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் 
பழனிசாமி இன்று மாலை அறிவித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அ.தி.மு.க.
 அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் கமிஷன் மாறியுள்ளது. உச்ச நீதிமன்ற 
உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் 
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் 
முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உள்ளாட்சி தேர்தல் 
விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை 
என தெரிவித்துள்ளார்.                
 

 
No comments:
Post a Comment