
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த
வெளிநாட்டை சேர்ந்த 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கார்நாடக அரசு பிரமாண
பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கி
இருக்கும் வெளிநாட்டினர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு சார்பில்
பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
நேற்று
முன் தினம் இந்த வழக்கு மீண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு
தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில்,கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 270
வெளிநாட்டினர்கைது செய்யப்பட்டதாகவும்,103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் மட்டும்
சட்டவிரோதமாக தங்கியிருந்த 178 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும்,
அதுதொடர்பாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களை
நாடு கடத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுகுறித்து மத்திய
அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அரசு
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் வழக்கு விசாரணையை
வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது
Newstm.in
No comments:
Post a Comment