Latest News

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்

இந்தி‌யாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்த மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, சோம் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் தொழில்துறை சிறப்புச் செயலாளர் அருண் ராய் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முன்னதாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அருண் ராய், தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் குறித்து எழும் பிரச்னைகள் மற்றும் அதற்கு உண்டான வழிவகைகளை தமிழ்நாடு அரசு எவ்வாறு சிறப்பாக ஒற்றைச்சாளர முறையில் கையாளுகிறது என்பதனை விளக்கினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.