
போட்டியின்றி தேர்வாகின்றனர்... மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் தேசத்துரோக வழக்கின் தண்டனை காரணமாக மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.
இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார். பின் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்.

No comments:
Post a Comment