
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில்
சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று
கொண்டிருந்தனர். அப்போது, நடைபெற்ற தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம்
அடைந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதிகள்
தாக்குதலை தொடர்ந்து, நேற்று தெற்கு காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக இணைய வேகம் 2 ஜியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று
ஜம்முவில் செல்போன் இணையதளசேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதேபோல்,
ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment