
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை, ஆந்திர காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவத்துக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருப்பதியில்
இருந்து கடப்பா செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் பயணித்த 84
தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த 84 பேரும்
செம்மரக்கட்டை கடத்த வந்திருப்பதாக ஆந்திர காவல்துறையினரே யூகம் செய்து
கைது செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஆந்திரத்தில் கைது
செய்யப்பட்டுள்ளதும், அதில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் ஆந்திர சிறையில்
வாடிக்கொண்டிருப்பதும் வேதனைக்குரியது.
ஆந்திரத்தில் செம்மரக்கட்டைகள்
கடத்துவோரையும், அவர்களை எந்த முதலாளிகள் பயன்படுத்துகிறார்களோ
அவர்களையும்தான் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். இனி தமிழகத்தில்
இருந்து ஆந்திரத்துக்கு வேலைக்குச் செல்ல விரும்புவோர் எந்த வேலைக்காக,
யார் மூலம், எத்தனை நாள்கள் வேலைக்குச் அழைத்துச் செல்லப்படுகின்றனர் என
அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்திவிட்டு செல்லக்கூடிய நிலையை தமிழக
அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment