Latest News

இலங்கை அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழக கடலோரப் பகுதியில் மழை வாய்ப்பு

இலங்கை அருகே உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும்'' என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.