Latest News

பன்னீர்செல்வம் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்.. ஜெ. மறைவுக்கு இரங்கல்

 
ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சரவை சகாக்கள் அஞ்சலி செலுத்திவிட்டு கோட்டைக்கு சென்றனர்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.