Latest News

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 
பாகிஸ்தானில் உள்ள லாஸ்பெல்ல என்ற இடத்தில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெல்லா என்ற இடத்தில் உள்ள ஷா நூரானி பள்ளி வாசல் அருகே பயங்கர சத்தத்துடன் திடீரென இன்று மாலை குண்டுவெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனமங்களும் விரைந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.