தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவரது மகன் அப்துல் வாஹிது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தோ - நேப்பால் ஊரக விளையாட்டு போட்டி, ஏப்ரல் 11ல், காட்மாண்டுவில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். ஜூடோ போட்டியில் மாணவன் அப்துல் வாஹிது கலந்துகொண்டு விளையாடினார். போட்டியில் வெற்றி பெற்று ஆசியா ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமுமுக நிர்வாகிகள் ஆசிய ஜூடோ போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற மாணவன் அப்துல் வாஹிதை அதிரை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமுமுக தஞ்சை மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச்செயலாளர் கமாலுதீன், மன்சூர், சேக் நசுருதீன், நியாஸ் அஹமது, இப்ராஹிம்ஷா உள்ளிட்ட தமுமுகவினர் இருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்




No comments:
Post a Comment