ஆலங்குடி தொகுதி பாமக வேட்பாளர் சுப. அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்துள்ளார். சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாமக சார்பில் மாநில துணை செயலாளர் சுப. அருள்மணி போட்டியிடுகிறார். அவர் தான் போட்டியிடும் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கிராமங்களில் இரவு நேர கூட்டங்கள் நடத்தியும், திண்ணை பிரச்சாரம் மூலமும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் அவர் கீரமங்கலம் கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார். கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் பேருந்து நிலையம், காந்திஜி சாலை மற்றும் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார். அவர் கடந்த ஒரு மாத காலமாகவே வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment