Latest News

எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை: அம்பானி சகோதரர்கள் மறுப்பு


வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 1,195 பேரின் பெயர்ப் பட்டியல் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் அது தெரிவித்திருந்தது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் நாராயன் ரானே, பால்தாக்கரே மருமகள் ஸ்மித்தா தாக்கரே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில், இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பலரும் தங்களது பெயரில் எந்த வெளிநாட்டு வங்கியிலும் ரகசிய கணக்குகள் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர், உலகில் உள்ள எந்த நாடுகளிலும் முகேஷ் அம்பானியின் பெயரில் சட்டவிரோதமான வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

அனில் அம்பானியின் சார்பில் விளக்கம் அளித்த அவரது செய்தி தொடர்பாளரும், அனில் அம்பானிக்கு எச்.எஸ்.பி.சி. வங்கியின் எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.