இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இதன் முடிவுகள் நள்ளிரவில் தெரிந்துவிடும்.
இலங்கை அதிபர் தேர்தல் இன்று (வியாழன்) நடந்தது. இதில் ராஜபக்சே மீண்டும் அதிபராக போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
யாழ் மாவட்டத்தில் 59, வவுனியா 70 , கம்பஹா 60, நுவரெலியா 70, மாத்தளை 72, கொழும்பு 76, அனுராதபுரம் 76, முல்லைத்தீவு 68, திரிகோணமலை 60 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 10 மணிக்கு அதன் முடிவுகள் தெரிய வரும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், நள்ளிரவிலேயே முடிவுகள் வெளியாகும்.
No comments:
Post a Comment