Latest News

கடலில் மிதக்கும் ஏர் ஏசியா பயணிகளின் சடலங்கள்: கதறும் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோரின் சடலங்கள் ஜாவா கடற்பகுதியில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷாவிலிருந்து 162 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் ஜாவா பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அங்கு ஏராளமான சடலங்களும் மிதப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.