நவீன முறையில் இளம் பெண்களை வைத்து பிச்சை எடுத்ததில் 4 வருடங்களில் 24 கோடி வருமானம் !! படங்கள் இணைப்பு !
நவீன முறையில் இளம் பெண்களைப் பயன்படுத்தி, நான்கு வருடங்களில் 24 கோடிகளுக்கு மேல் சம்பாதித்துள்ளான் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ஒருவன். காசு எங்கே போனது என்று தெரியவில்லை. இதுமட்டும் அல்ல சுமார் 43 பெண்கள் இவனால் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சியான செய்திகளும் வெளியாகி வருகிறது.
பணத்தாசை தலைக்கேற, இவர் வன்னியிலும் தனது கிளை அமைப்பை தொடங்கியுள்ளார். ஆனால் அங்கே வேலைபார்த்த பெண்கள் ஆவணங்களை எடுத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்
தமிழ் மக்களின் உழைப்பைக் குடிக்க கைதடியில் இருந்து புறப்பட்ட ஒரு நரியின் கதை இதோ ! “வறுமையின் கரங்கள்” என ஒரு நிறுவனத்தை கைதடியில் அமைத்து, அந்த நிறுவனத்தின் மூலம் மாதம் 50 இலட்சத்திற்கு மேல் நவீன முறையில் தந்திரமாக மக்களை ஏமாற்றி இது வரை 24 கோடிகள் வரை சம்பாதித்து பிச்சை எடுத்துள்ளான் பரமசாமி சிறிசந்திரமோகன் எனும் குள்ள நரி.
இந்த சந்திர மோகன் குறித்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக, தோ்ந்தெடுக்கப்பட்ட இளம் யுவதிகளை பாலியல் ரீதியாக ருசித்துவிட்டே வேலைக்கு அமா்த்தியுள்ளனான். கடந்த நான்கு வருடமாக இவனிடம் 300ற்கும் மேற்பட்ட யுவதிகள் பணிபுரிந்ததாகவும், இவனின் லீலைகள் தாங்காது பலர் வேலையை விட்டு ஓடியதாகவும் தெரியவருகின்றது.
மொத்தமாக 43 இளம் யுவதிகள் இவனிடம் சிக்கி பின்னர் பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். இவனது பாலியல் லீலைகளையும் பண மோசடிகளையும் அறிந்த முல்லைத்தீவில் கிளையமைத்துள்ள இந் நிறுவனத்தின் பெண் ஊழியா்கள் இந் நிறுவன ஆவணங்களை தீயிட்டு எரித்து தமது நிறுவன ஆடைகளையும் கொழுத்தி எரிக்கும் காட்சியும் இந்த நிறுவனம் தொடா்பாக பணியாளரான இளம் பெண் தரும் தகவல்களும் காணொளியாக.
தன்னால் பாலியலுறவுக்கு உள்ளாக்கப் பட்ட பெண்களை நிதி சேகரிப்பு என்ற போர்வையில் வறுமையின் கரங்கள் நிறுவனத்தின் பெயரில் ரிக்கட், பற்றுச்சீட்டுக்களுடன் வீடுகள், நிறுவனங்கள், மக்கள் கூடும் இடங்கள், கோவில்கள் போன்றவற்றில் காசு சோ்க்க அனுப்புவது இவன்வேலை. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு 5 ஆயிரம் முதல் ஐம்பது ஆயிரம் வரை சோ்த்ததாகவும் தெரியவருகின்றது. நாள் ஒன்றிற்கு இப் பெண்களால் குறைந்தது இரண்டு லட்சத்திற்கு மேல் சேகரிக்கப்பட்ட வந்ததாகத் தெரியவருகின்றது.
இவா்களுக்கான சம்பளமாக சொற்ப அளவான குறிப்பிடத்தக்க பணத்தை கொடுத்துவிட்டு மிகுதி எல்லாவற்றை தானே எடுத்துக் கொண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் எதுவோ அந்த நோக்கத்திற்காக ஒரு துளி பணத்தையும் கொடுக்காது பெரும் முறை கேட்டைச் செய்துள்ளான் இந்த சந்திரமோகன்.
இவனது நிதிசேகரிப்புத் தொடா்பாக சந்தேகம் கொண்ட சாவகச்சேரி பிரதேசசெயலா் இந்த நிதிசேகரிப்புத் தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு தெரிவித்தும் அது தொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இந்த வறுமையின் கரங்கள் நிறுவனமானது வெளிநாட்டில் உள்ள புலம்பெயா் தமிழா்களையும் ஏமாற்றி நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக புலம்பெயா் தமிழா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இந்த நிறுவனம் தொடா்பாக யார் வந்தாலும் அவா்களை நையப்புடைத்து அனுப்பவும் தயங்கக் கூடாது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை என தமிழா்கள் வாழும் எல்லா இடங்களிலும் இவனது பெண் பணியாளா்கள் தங்கள் பணிகளைச் செய்துள்ளனா். இந்தப் பெண்பணியாளா்களைப் பாலியல் ரீதியில் இவன் பயன்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட வைத்ததால் அப் பெண் பணியாளா்களும் பல தில்லு முள்ளுகளுடன் நிதி சேகரித்து வருகின்றனா். சில சமயம் இவா்கள் பெரும் பணக்கார முதலைகளிடம் பாலியல் வலையில் அகப்பட்டும் பணத்தைச் சேகரித்து வந்துள்ளனா்.
இவனது பாலியல் பலவீனத்தைப் பயன்படுத்தி இவனுக்குக் கீழ் வேலை செய்த சில யுவதிகள் தாங்களாகவே போலி பற்றுச்சீட்டு, ரிக்கட் அடித்து வீடுவீடாகவும் , நிறுவனங்களிலும் காசு சோ்த்துள்ளனா். அந்தப் போலி ரிக்கட் இங்கு தரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஒரு யுவதி சோ்த்த பணம் எவ்வாறு பங்கிடப்பட்டுள்ளது என்பது அவா்களது கணக்கு புத்தகத்தில் இரு்நது எடுக்கப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளது. தாங்களே காசு சோ்த்து தங்களுக்குள் பகிா்ந்துள்ள விபரம் காட்டப்பட்டுள்ளது. இங்கு வங்கியில் வைப்புச் செய்தது என தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த சந்திரமோகனுக்கு அனுப்பப்பட்ட பணமே ஆகும். தொலை பேசி றீலோட் எனப்படுவது சந்திரமோகன் கதைப்பதற்காக குறித்த பெண்கள் சோ்த்த பணத்தில் அனுப்பப்பட்ட றீலோட் ஆகும்.
No comments:
Post a Comment