Latest News

முத்துப்பேட்டை அருகே பரபரப்பு டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் கசிவு ஊரை விட்டு மக்கள் வெளியேற்றம் !!


நாகை அருகே உள்ள நரிமணத்தில் இருந்து 6 டேங்கர் லாரிகளில் சமையல் எரிவாயு(கேஸ்) எடுத்து செல்லப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்த லாரிகள் இரவு 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை கடந்து  பட்டுக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் பாமணி ஆற்றின் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக முதலில் வந்த லாரி திடீரென அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டேங்கர் மட்டும் தனியாக கழன்று விழுந்து டேங்கர் வால்வு சேதமடைந்தது. கேஸ் கசியத்தொடங்கியது.

உடனடியாக போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெருகவாழ்ந்தான், மன்னார்குடி வழியாக திருப்பி விடப்பட்டது. லாரி கவிழ்ந்த இடத்தின் அருகில் இருந்து 1.கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு  வடகாடு பகுதிக்கும் 1 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள தோப்புகளுக்கும் அனுப்பி வைத்தனர். இரவு முழுவதும் பலர் தோப்புகளிலேயே தங்கி இருந்தனர். 1 கி.மீட்டர் சுற்றளவில் யாரும் அடுப்பு எரிக்க வேண்டாம், பீடி, சிகரெட் பிடிக்கவேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர். அத்துடன் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மதுக்கூர், மன்னார்குடி ஆகிய 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் கேஸ் வெளியாகும் சிலிண்டரில் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துகொண்டிருக்கிறார்கள். இன்று காலை வரை அந்த பணி நடக்கிறது. சிலிண்டரை மீட்க, நாமக்கல், திருச்சியில் இருந்து பொக்ளின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீட்பு வாகனம் வந்தபிறகு தான் சிலிண்டரை சரியாக நிறுத்தி அதில் உள்ள காஸ் இன்னொரு சிலிண்டருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்குள்ளான லாரியை ஓட்டிச்சென்ற டிரைவர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதன்(25) என்பவரும் விபத்தில் காயமடைந்தார்.

நன்றி
தினகரன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.