விழுப்புரம் அருகே தியாகதுருகத்தில் 500 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை மதுமிதா தவறி விழுந்தது. அக்குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தை அடுத்த தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு போட்டுள்ளார். ஆனால் அது மூடப்படாமல் இருந்தது.
இன்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் குழந்தை மதுமிதா அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தது. இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர். குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த குழந்தைக்கு தற்போது ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் விரைவில் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment