விதியின் விளையாட்டில்
சிக்கிக் கொண்டவளே
வாழ்க்கை கனவுகள்
பலகண்டவளே
பாவிமகன் வீசிட்ட ஆசிட்டில்
தன்னுயிரை மாய்த்தவளே
வினோதினி உன்னை
நண்பர்கள் செல்லமாய்
வினோ என்றழைப்பர்
அதை We Know
உன் பெற்றோர் பட்ட
வேதனையும் We Know
ஆண் மகனின்
ஆணவம்தான் We Know
அன்பாய் அழகினாலும்
ஒரு அடி தள்ளி நின்று
பழகிடல் நன்று
என்பதையும்
போதித்து விட்டாய்
வினோ [We Know]
வினோதினி !
நீ தீனியானாய்
மரணத்திற்க்கு
சிறிது காலமாய்
பத்திரிக்கைகளுக்கும்
தீனியானாய்!
ஏனியாவாய்
என காத்திருந்த
பெற்றோருக்கு?
வயிற்று பசிக்காக
வேலை செய்யவரும்
பெண்களுக்கு
உங்கள் காமப்பசிக்கு
இரையாக்கிட நினைக்காதீர்
ஆடவரே
No comments:
Post a Comment