இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !
சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்
முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி
நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்
பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்
கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்
இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்
கடைக்கண் திறக்காதோ காவிரி உன்றன்
மடைத்தாள் திறக்காதோ மனம்
பூக்கள் பூக்க மறந்தனவே
புற்கள் மடிந்து உறங்கினவே
நாட்கட் செல்ல மறுப்பதுமே
நாங்கள் பட்டத் துன்பமாமே
காவிரி நீயும் வீணிலே யாங்குக்
.....கைதியாய் நிற்பதும் ஈண்டுப்
பூவிரிச் சோலை நெற்கதிர் கூட்டம்
.....பூமியில் செத்திடக் காண்பாய்!
பாவிகள் உன்னை அடைத்திடக் கண்டும்
......பாடலில் வடித்திடும் கருத்தை
மேவிடும் தமிழ்நாட் டின்நிலை கண்டும்
....மெச்சவும் கையறு நிலைதான் !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
No comments:
Post a Comment