Latest News

  

இப்படியும் ஒரு சந்தேகம் !



ஒரு சிறிய கிராமம். கதையின் நாயகியான சிறுமி, தன் சக மாணவிகளுடன் காலைப்பொழுதில் சிறிது தொலைவிலிருந்த குர்ஆன் மதரசாவில்  ஓதச் செல்பவள். திரும்பி வரும் நேரத்தில் அக்கிராமத்தைக் கடந்து செல்லும் ஒரே ரயில் வரும்வரை தாமதித்து நின்று அதற்கு டாட்டா சொன்ன பிறகு தான் அனைவரும் வீடு திரும்புவர்.

வளர்ந்து பெரியவளானதும் அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவனுக்கு துபையில் நல்ல வேலை. இவளையும் துபைக்கு அழைத்துச்செல்ல எல்லா ஏற்பாடும் ஆகிவிட்டது. புறப்பட வேண்டிய நாளும் வந்தது. பிறந்து இவ்வளவு காலம்  வாழ்ந்த ஊரை மீண்டும் எப்போது காண்போமோ ? என்ற ஏக்கம் அவளுக்கு பிரயாண நாளின் காலையில் ஊரை ஒரு முறை சுற்றிப்பார்த்து விட்டு வரும் ஆசையை கணவனிடம் தெரிவிக்கிறாள். அவனும் சம்மதிக்க, இருவரும் வெளியே செல்கின்றனர். அவள் சிறு வயதில் ஓதிய மதரஸா……வழியில் ரயில் கடக்கும் பாதை…


அந்நேரத்தில் ரயில் வருகிறது. ஆசையுடன் நின்று பார்த்துக்
கொண்டிருக்கிறாள். அவளை அறியாமலேயே அவளது கை உயர்ந்து
அப்பாவித்தனமாக ரயிலுக்கு டாட்டா சொல்கிறது. ரயிலின் படிக்கட்டில் பயணம்  செய்துகொண்டிருந்த எவனோ ஒருவன் பதிலுக்கு கையசைத்துச் செல்கிறான்.


கணவனை சந்தேக நோய் பற்றுகிறது. "யார் அவன் ?" என்று கேட்கிறான்.
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவள்  "சத்தியமாக எனக்குத் தெரியாது"
என்கிறாள். கணவன் ஒன்றும் பேசவில்லை. வீடு திரும்பும் வழியிலும் பேசவில்லை. பிரயாண நேரம் வந்தும் பேசவில்லை. தன்னுடைய உடைமைகளை மட்டும் எடுக்கொண்டு அவளை விட்டு விட்டு தனியாக புறப்பட்டுச் சென்று விடுகிறான் அனலிலிட்ட புழுவாக அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள்...

கண்ணால் பார்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தலே சரியான தீர்வாக இருக்கமுடியும் விட்டு விட்டு போன கணவனும் மனபுழுக்கத்துடன் தான் [சந்தேக எண்ணத்தோடு] சென்றிருப்பான். சந்ததேகமெனும் கொடிய நோயிலிருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக

முஹம்மது சலீம்

நன்றி : வலையுகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.