பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவோருக்கு எதிராக புதிய சட்ட திருத்தம் செய்து அக்கயவர்களை மூன்று ஆண்டுகள் சிறையில் தள்ள வகை செய்யும் சட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
முன்னதாக, பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது நினைவிருக்கலாம். தற்சமயம், நுட்பியல் வளர்ந்துள்ள நிலையில்,அலைபேசி குறுஞ்செய்தி, படச்செய்தி, மின்னஞ்சல் மூலம் ஆபாச செய்திகளை அனுப்பும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இந் நிலையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, பெண்களுக்கு ஆபாச செய்தி அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.
ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.
இச்சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண்களுக்கு ஆபாச செய்தி அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.
ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.
இச்சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment