Latest News

  

'சந்திப்பு' : ‘புதுமைக்கவி’ சகோ. அதிரை அப்துல் ரஜாக் [காணொளி]

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாம், சமூக மேம்பாட்டிற்காக செயல்படுத்தக்கூடிய நல்ல விஷயங்கள் மற்றும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய தீங்குகள் போன்றவற்றின் சாதக/பாதகங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது என்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. சமுதாய விழிப்புணர்வு...
2. கல்வியின் அவசியம்...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அதிரை அப்துல் ரஜாக் அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

அதிரை அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எழுத்துத்துறையில் பங்களிப்பாற்றும் இவர் இஸ்லாமிய இதழ்களான நர்கீஸ், முஸ்லீம் முரசு, மறுமலர்ச்சி, நற்சிந்தனை, சமரசம், மக்காச்சுடர், மணிச்சுடர், அல்இஸ்லாம் போன்றவற்றில் பல்வேறு சமூக ஆக்கங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புதுமை பூக்கள்’ என்ற நூலை எழுதிருப்பதோடு மட்டுமல்லாமல் மார்க்க பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.