Latest News

  

பத்தாம் வகுப்பு தேர்வு - தஞ்சை ஸ்ரீநாத் முதலிடம்


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தஞ்சாவூரைச் சார்ந்த மாணவர் ஸ்ரீநாத் முதல் மாணவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். ஸ்ரீநாத்,தஞ்சை பி.ஆர்.பள்ளி மாணவர் ஆவார்.

ஆறு மாணவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளனர்.

அறிவியலில் 9237 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 1141, சமூக அறிவியலில் 5345 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 86.2 ஆகும். வழக்கம் போல் மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 89 சதவிகித மாணவிகளும், 83.4 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.