Latest News

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா!

மத்திய ஜவுளித் துறை அமைச்சரும் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தம்முடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2G ஊழல் வழக்கில் ஏர்செல்  நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்  நிறுவனத்துக்கு விற்க ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டினார்  எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில் சிபிஐ தயாநிதி மாறனை விசாரிக்க சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய தயாநிதிமாறன் இன்று தம்முடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த தயாநிதிமாறன் தம்முடைய ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக இன்று காலை நடைபெற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.