Latest News

உலகின் அதிவிலை கார் இந்தியாவில் அறிமுகம்

உலகின் குறைந்த விலை சிற்றுந்தான டாடாவின் நானோவை தயாரிக்கும் நாடாக பெருமை பெற்றது இந்தியா. அதுபோல, உலகின் விலையுயர்ந்த சொகுசு சிற்றுந்து புகாட்டி வெய்ரோன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டளவில் சிற்றுந்து (கார்)  உற்பத்தியில் முன்னணியில் உள்ள வொக்ஸ்வாகன் குழுமத்தின் ஒரு அங்கம் தான்  புகாட்டி நிறுவனம். இந்த புகாட்டி நிறுவன, புகாட்டி வெய்ரோன் என்று பெயர் பெற்றுள்ள தனது தயாரிப்பான  விலையுயர்ந்த வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.


டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  இந்த சிற்றுந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை இந்திய அளவில், மிக உயர்ந்த விலையில்  ரோல்ஸ் ராய்ஸ் பான்டோம், பென்ட்லி முல்சானி மற்றும் மெர்சிடிஸ் ‌பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் உள்ளன., இவற்றின் விலை அதிகபட்சமாக ரூ. 5 கோடியாக உள்ளது. இந்நிலையில் , ரூ. 16 கோடியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தங்கள் நிறுவன கார், இந்தியச்சந்தையில் விரைவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்றும், முதற்கட்டமாக ஆண்டிற்கு 350 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று போக்ஸ்வாகன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
 
நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.