Latest News

  

மெக்காவில் 'ஹஜ்' கடமையை நிறைவேற்ற வந்த இருவர் 'தற்கொலை'

புனித நகரான மெக்காவில் 'ஹஜ்' கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து இலட்சகனக்கானோர் வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 98000 பேர் வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இங்கு வந்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இருவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.  இரண்டுமே தனித்தனியான தற்கொலை ஆகும்.

அடையாளம் இன்னும் அறிந்திராத ஒரு ஆபிரிக்கர் வயது 40 தந்தி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதே தினத்தன்று விடுதி அறையில் இருந்து கீழே குதித்து அதே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் வயது 50 ஆகும். இவர் கழிவறைக்கு சென்று அங்கிருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரண்டையும் விசாரித்த புனித மெக்கா நகர காவல் துறையினர், இரண்டுமே தற்கொலை தான் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதி படுத்தி உள்ளனர். மேலும் விசாரித்து வருகிறார்கள்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.