Latest News

  

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 8,183 பேருக்கு கொரோனா; சிகிச்சை பலனின்றி 180 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று 8,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 180 பேர் உயிரிழந்துள்னர். சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,71,179 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8,183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 1,014பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 180 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 70 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 110 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதையடுத்து மொத்தம் 31,015 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 468 பேர், செங்கல்பட்டு 334, கோவை 1,014 என ஒரே நாளில் மட்டும் 8,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.