
தமிழ்நாட்டில்கோவை, விழுப்புரம்உள்ளிட்ட 24 மாவட்டஆட்சியர்கள் பணியிடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர்இறையன்புபிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் ஆகியோரை நியமித்து தமிழக உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக மோகன், வேலுார் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ், திருப்பத்துார் மாவட்ட ஆட்சியராக அமர் குஷாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா சிங், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன், கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத், அரியலுார் மாவட்ட ஆட்சியராக ரமண சரஸ்வதி, கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபுசங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத ரெட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திரகலா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ண உன்னி, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in
No comments:
Post a Comment