
சென்னை : 'திருமணங்களுக்கு செல்வதற்காக, 'இ - பதிவு' வசதியை, அதற்கான
இணையதளத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துஉள்ளனர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரண்டு
வாரங்களுக்கு முன், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது,
மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு மட்டும், இ -
பதிவு அனுமதி வழங்கப்பட்டது.தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கிய
பிறகும், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்கான, இ - பதிவு வசதி
வழங்கப்படவில்லை.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பத்திரிகையில் பெயர்
இருந்தால், திருமண நிகழ்வில் பங்கேற்க, சில வாரங்களுக்கு முன் அனுமதி
வழங்கப்பட்டது.அதற்கு, இ - பதிவு இணையதளத்தில், திருமணம் என்ற பிரிவு
சேர்க்கப்பட்டது.
தளர்வில்லாத ஊரடங்கின் போது, அந்த பிரிவு
நீக்கப்பட்டது.தற்போது, சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், திருமண
பிரிவு வசதி வழங்கப்படவில்லை.ஜூன், ஜூலையில் ஏராளமான முகூர்த்த தினங்கள்
உள்ளன. இதில், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உடன் பிறந்தோர் திருமணம்
நடைபெற இருக்கிறது. திருமண வீட்டை சேர்ந்தவர்கள் பலர், வெளியூர்களில்
உள்ளனர்.அவர்கள் திருமணத்திற்கு செல்ல, eregister.tnega.org என்ற
இணையதளத்தில் பதிவு செய்ய, திருமண வசதி கொடுக்கப்படவில்லை.அதனால், திருமண
வீட்டாரே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருமணத்தில் பங்கேற்க
ஏதுவாக, இ - பதிவு இணையதளத்தில்,அதற்கான வசதியை, தமிழக அரசு வழங்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment