
புது டில்லி: பிரதமர் மோடி அறிவித்த புதிய கொள்கையின் கீழ் கோவிட்
தடுப்பூசிகளை வாங்குவதில் தங்களுக்கு தெளிவு இல்லை என்றும், இதனால்
தடுப்பூசி போடும் பணிகளை நிறுத்தியுள்ளதாக பல தனியார் மருத்துவமனைகள்
கூறியுள்ளன.ஜூன் 21 முதல் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கான புதிய
வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி உற்பத்தியாளர்கள்
தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கும். தனியார்
மருத்துவமனைகளுக்கு தங்களின் மாத உற்பத்தியில் 25 சதவீதத்தை மட்டுமே
நேரடியாக வழங்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெரிய, சிறிய
மருத்துவமனைகள், பிராந்திய சமநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு
மருத்துவமனைகளின் தேவையை மாநிலங்கள் ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டது.ஆனால்
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் தடுப்பூசி பெறுவதில் குழப்பம் நிலவுவதாக
பல்வேறு தனியார் மருத்துவமனைகள் கூறுகின்றன.
இது பற்றி மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்ட போது, மத்திய
அரசின் கொள்கை தெளிவாக இல்லாததால் ஜூன் 21 வரை காத்திருங்கள் என்று
கூறியதாக பாத்ரா மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.சி.எல். குப்தா கூறினார்.
"மத்திய அரசும் காத்திருக்க சொல்லியிருக்கின்றன. நிறுவனங்களை அணுகினோம்
அவர்களுக்கும் இதில் ஒரு தெளிவில்லை" என்கிறார். தடுப்பூசி கொள்முதலுக்கு
தங்களுக்கு முறையான வழிமுறைகள் மற்றும் ஒற்றை சாளர முறை தேவை
என்கின்றனர்.இதன் காரணமாக பல தனியார் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி போடும்
பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டாவது அளவைப் பெற வேண்டியவர்கள்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சில மருத்துவமனை நிர்வாகிகள்
கூறினர். விரைவில் வெளிப்படையான, தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டு
மேற்கொண்டு ஏற்படும் தாமதத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment