
புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தமிழக தொழில்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தொழில்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தொழில்துறையினர் முன்வந்துள்ள நிலையில் இதுவரை 10 நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில், விரைவாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment