Latest News

  

NHS ஊழியர்கள், செவிலியர்களின் ஊதிய உயர்வு. "இதுக்கு மேல அதிகமா கொடுக்க முடியாது". பிரிட்டன் பிரதமர் திட்டவட்டம்.!!

பிரிட்டனில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் NHS ஊழியர்களுக்கும், செவிலியர்களுக்கும் 1% மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

நேஷனல் ஹெல்த் சர்வீஸில்(NHS ) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கடந்த ஆண்டு 2.1 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த வருடம் 1 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் மற்றும் NHS ஊழியர்கள் ஊதிய உயர்வை அதிகரிக்க கட்டாயம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்படி உயர்த்தப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் NHS ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசாங்கம் முடிந்த வரை ஊதிய உயர்வை அளித்துள்ளது.

ஆனால் இதற்கு மேல் ஊதிய உயர்வு கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார். இதனால் 1% ஊதிய உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று NHS ஊழியர்களும் செவிலியர்களும் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த நபருக்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக அதிகாரிகள் 10,000 யூரோ அபராதம் விதித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.