
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பாஜக பூத் ஏஜென்ட் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.29 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைத்தோட்டம் அணைக்கரைமேடு மாரியம்மன் கோயில் வீதியில் ஒரு நபர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கக்கோரி பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை யிட்டனர்.
அப்போது அவர் கட்சித் துண்டுகளில் பணத்தை மறைத்து வைத்து வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பூத் ஏஜென்ட் காத்தவராயன் (31) என்பதும், பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரிவாக்காளர்களுக்கு பணம் கொடுத் ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.29 ஆயிரம் பணம் மற்றும் 6 கட்சித் துண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காத்தவராயனை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment