
10 மற்றும் 12ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுத் தேதிகள் மேமாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் நாளில் தேர்வுகள் நடக்க இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது குறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ இயக்குநர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை மறுபரிசீலனை செய்வோம் எனவும், ரமலான் அன்று நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை நிறைவேற்றப்டும் எனவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.இதன்படி ரமலான் தினத்தன்று மே13, 15-ல் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8க்கு மாற்றப்படுவதாகவும், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான புதிய தேர்வு தேதிகளாக மே 21ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான புதிய தேர்வு தேதி ஜூன் 2 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment