Latest News

  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை !

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பலத்த மழை பெய்து வந்தது. நிவர், புரெவி ஆகிய இரு புயல்கள் காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடற்கரை மாவட்டங்கள், சென்னையில் கனமழை கொட்டியது.

இயல்பைவிட அதிகளவு மழை பெய்ததாக வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால் அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்தநிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

இந்நிலையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.