Latest News

  

கமல்ஹாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.!!

கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், டார்ச்லைட் சின்னத்தை முன்னிறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரம் செய்து வந்தனர்.

இதனிடையே, பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட வில்லை. மாறாக தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் டார்ச் லைட் சின்னத்தை தமக்கு ஒதுக்கீடும் படியும், எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், டார்ச் லைட் வேண்டாம் என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் நீதிமன்றம் சென்ற நிலையில், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் எந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.