பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் ஒரு தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று மாலை போலீசார் திடீரென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 3 பேர் தங்கியிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலளித்தனர். இதனால் அவர்களிடம் இருந்த பொருட்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ஒரு அம்மன் சிலை, மரகத கல் பதித்த நாகலிங்க சிலை, சிறிய வடிவில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட பொருளை பறிமுதல் செய்தனர். அவை ஐம்பொன்னால் ஆனவை என்று கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கறுப்பசாமி மற்றும் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment