ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தந்த மாவட்டங்களிலேயே நல்லாசிரியர் விருதுகளை ஆட்சியர்கள் வழங்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விருது பெறுபவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாயகன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்.ரமேஷ், பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மா.மாலதி, கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி எம்.லாரன்ஸ், குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி கோ.நண்பன், கீழம்பி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வே.ரமேஷ்குமார், கூத்திரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி க.சங்கரி, மேற்கு ராஜவீதி சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி ஏ.ஜாக்குலின் மேரி ஆகிய 7 பேர் நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள். இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோயில் ச.லலிதா, மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி து.வி.வெங்கடப் பெருமாள், குருவாபதன் மேடு ஏ.வரதன், மேற்கு தாம்பரம் எம்.சி.சி.ஆர்.எஸ்.எல்.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் த.லீதியாள் சநாந்தகுமாரி ஆகியோரும் முதுகலை ஆசிரியர்களில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அ.வி.பாபு கிறிஸ்டோபர், மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ரா.புஷ்பா ஆகிய 6 பேரும் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெறுவதாகவும், இவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் அவர்களால் விருது வழங்கப்பட இருப்பதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

No comments:
Post a Comment