Latest News

  

மாரிதாஸ் வீட்டில் ஒரு மணி நேரம் போலீஸ் சோதனை - ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? - விரிவான தகவல்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: மாரிதாஸ் வீட்டில் ஒரு மணி நேரம் போலீஸ் சோதனை

மாரிதாஸ் வீட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய போலீஸார். சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:

மதுரை கே.புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த சேர்ந்த யூ-டியூபர் மாரிதாஸ், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், தொலைக்காட்சி நெறியாளர்களும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டார்.

இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சென்னை சைபர்கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி தலைமையில் 4 போலீஸார் நேற்று மதுரை வந்து மாரிதாஸ் வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மாரிதாஸ் வீட்டின் முன்பாக திரண்டனர் என்கிறது அந்தச் செய்தி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.