Latest News

  

மூன்று நாட்களுக்கு மேல் பொறுமை காக்க மாட்டோம்: பா.ஜ.,

புதுடில்லி: டில்லியில் போரட்டம் நடைபெறும் சாலைகளை போலீசார் காலி செய்யாவிட்டால் போலீசாரின் பேச்சை கேட்க மாட்டோம் .மூன்று நாட்களுக்கு மேல் பொறுமை காக்க மாட்டோம்என டில்லி பா.ஜ., தலைவர் கபில் மிஸ்ரா தெரிவித்து உள்ளார். டில்லியில் பல்வேறு பகுதிகளில் சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா டுவிட்டரில் போலீசாருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் பதிவிட்டு இருப்பதாவது: டில்லயின் ஜப்ராபாத், சந்த் பாக் ஆகியஇடங்களில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதிகளில் போலீசார் சாலைகளை காலி செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். என்ன காரணம் காரணம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது சுற்றப்பயணம் முடிந்த பின்னர் சாலைகள் காலியாக வேண்டும் . இல்லையெனில் நாங்கள் சாலைகளில் இறங்குவோம்.

அப்பொழுது எங்களை சமாதானப்படுத்த முயற்சிக்காதீர்கள், நாங்கள் உங்கள் பேச்சை கேட்க மாட்டோம். சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் டில்லி பற்றி எரிகிறது. கலவரக்காரர்கள் இதனை மட்டுமே விரும்புகின்றனர். அதனால்சாலைகளை தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் கலவரம் போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். என பதிவிட்டுள்ளார்.dir="ltr">दिल्ली पुलिस को तीन दिन का अल्टीमेटम - जाफराबाद और चांद बाग की सड़कें खाली करवाइए इसके बाद हमें मत समझाइयेगा , हम आपकी भी नहीं सुनेंगे, सिर्फ तीन दिन@DelhiPolice pic.twitter.com/9ozTazMZew- Kapil Mishra (@KapilMishra_IND) February 23, 2020 முன்னதாக கபில்மிஸ்ரா டில்லியின் மவுஜ்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.