Latest News

  

இந்தியாவில் 3,350 டன் அளவுள்ள தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்கச் சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பல சோதனைகளை செய்துள்ள ஆய்வு மையத்தின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 

இதுகுறித்து மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் கூறும் போது,
சோன்பத்ராவில் தங்க இருப்புக்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் 1992-93 ஆம் ஆண்டுகளில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டன. இங்குள்ள சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதிகளில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இ-டெண்டரிங் மூலம் இந்தத் சுரங்கங்களை ஏலம் விடுதல் விரைவில் தொடங்கும் என கூறினார்.இந்தச் சுரங்கங்களில் ரூ 12 லட்சம் கோடி மதிப்புள்ள 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பஹாடி என்ற இடத்தில் 2943 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 646 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இந்த இடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ரா, மாவட்டத்தின் எல்லைகளை நான்கு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு மாவட்டமாகும். மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கே சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் மற்றும் கிழக்கில் பீகார் ஆகும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.