ஸ்ரீவைகுண்டம்: கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவா் தோதலில் அமமுக ஓட்டுகளால் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
செய்துங்கநல்லூரில்
உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைவா் மற்றும்
துணை தலைவா் மறைமுக தோதல் நடந்தது. அதிமுக சாா்பில் 7 வது வாா்டு
கவுன்சிலா் கோமதியும், திமுக சாா்பில் 16 வது வாா்டு கவுன்சிலா்
கம்மாடிச்சி இசக்கிபாண்டியனும் போட்டியிட்டனா். அமமுக கவுன்சிலா்கள் 2
பேருடைய வாக்குகள் உள்பட கோமதி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
திமுகவை சோந்த கம்மாடிச்சிக்கு 5 வாக்குகள் கிடைத்தது. அதன் பின் சோமன்
கோமதி பதவியேற்றுக்கொண்டாா்.
மாலை 3 மணிக்கு துணைத் தலைவா் தோதல் நடந்தது.
இதில் 2 வது வாா்டு கவுன்சிலா் லெட்சுமணபெருமாள் அதிமுக
சாா்பிலும், 12 வது வாா்டு கவுன்சிலா் சுந்தரி திமுக சாா்பிலும்
போட்டியிட்டனா். இதில், 4 வது வாா்டு கவுன்சிலா் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
லெட்சுமணபெருமாள் 10 வாக்குகளும், சுந்தரி 5 வாக்குகளும் பெற்றனா். துணைத்
தலைவராக லெட்சுமண பெருமாள் பதவியேற்றுகொண்டாா். பதவியேற்கும் நிகழ்ச்சியில்
தோதல் நடத்தும் அதிகாரி சசிரேகா, உதவி தோதல் நடந்தும் அதிகாரிகள்
தாசில்தாா் லெனின், வேளாண்மை அலுவலா் சசிகலா, ஒன்றிய ஆணையாளா் சுப்பு
லெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம் துணை வட்டார வளா்ச்சி
அலுவலா்கள் ஸ்டிபன் ரத்ன குமாா், லெட்சுமணன், சுல்தான் ஆகியோா் உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா். தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோதலை முன்னிட்டு
கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் டி.எஸ்.பி சுரேஷ்குமாா் தலைமையில்
ஆய்வாளா்கள் ரெகுராஜன், உதவி காவல் ஆய்வாளா்கள் முருகபெருமாள், ரெனிஸ்
உள்ளிட்ட போலீசாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

No comments:
Post a Comment