அதிராம்பட்டினம், ஜன.26
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் இந்திய 71-வது குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்து, இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம். நெய்னா முகமது அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார்.
மவ்லவி. எம்.எச் முகமது இப்ராஹீம், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, தங்க குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினர். நிறைவில், பி.ஜமாலுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பேரணி, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியும், சட்டையில் அணிந்துகொண்டும் அமைதியாகச் சென்றனர்.
நன்றி : அதிரைநியூஸ்
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் இந்திய 71-வது குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்து, இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம். நெய்னா முகமது அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார்.
மவ்லவி. எம்.எச் முகமது இப்ராஹீம், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, தங்க குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினர். நிறைவில், பி.ஜமாலுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பேரணி, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியும், சட்டையில் அணிந்துகொண்டும் அமைதியாகச் சென்றனர்.
No comments:
Post a Comment