சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா
ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் கரூர் வைஸ்யா
வங்கியிலிருந்து ரூபாய் 162 கோடி கடன் பெற்றுக்கொண்டு இன்னும் திருப்பி
செலுத்தவில்லை என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இதனால் சரவணா ஸ்டோர்ஸ்
கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன்
பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு
வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸில்
குறிப்பிடப்பட்டுள்ள 162.80 கோடி ரூபாய் தொகையை உடனடியாக திருப்பிச்
செலுத்துமாறு சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் உரிமையாளர் பல்லாகு துரையிடம்
கரூர் வைஸ்யா வங்கி அறிவிறுத்தியுள்ளது. கடன் வாங்குபவர் தொகையை திருப்பிச்
செலுத்தத் தவறினால், சொத்துக்களை கையகப்படுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பும்
என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment