அதிராம்பட்டினத்தின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர்
39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு
மிக்கது. இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படும்போது, அதிராம்பட்டினம்
மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்து
வருவர். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம்
உதவி வருகிறது.
பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் தண்ணீரால் நிரம்பி வழிந்தோடியது. இரவில் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) அமைப்பின் சார்பில், செடியன் குளக்கரையில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், இரவில், குளக்கரை முழுவதும் ஒளி படர்ந்து மின்னொளியில் ஜொலிக்கிறது.
மின் விளக்கு வழங்கிய சமூக ஆர்வலர் அதிரை சம்சுல் ரஹ்மான் மற்றும் தனது நிதியில் மின் விளக்கை அமைத்துக்கொடுத்த TIYA அமைப்புக்கும், இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் தண்ணீரால் நிரம்பி வழிந்தோடியது. இரவில் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) அமைப்பின் சார்பில், செடியன் குளக்கரையில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், இரவில், குளக்கரை முழுவதும் ஒளி படர்ந்து மின்னொளியில் ஜொலிக்கிறது.
மின் விளக்கு வழங்கிய சமூக ஆர்வலர் அதிரை சம்சுல் ரஹ்மான் மற்றும் தனது நிதியில் மின் விளக்கை அமைத்துக்கொடுத்த TIYA அமைப்புக்கும், இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.








No comments:
Post a Comment