
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண
தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை,
பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கில்
மேலும் ஒருவருக்குத் தொடர்பு உள்ளதாக சிறுமியின் தாய், கோவை மகளிர்
நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். பன்னிமடையைச் சேர்ந்த
1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி காணாமல்
போனார். மறுநாள் அவரது வீட்டின் பின்புறத்தில் துணியால், கை, கால்கள்
கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக துடியலூர்
போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமியின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்த
தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை மார்ச் 31-ஆம் தேதி கைது
செய்தனர்.
இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த 19-ஆம் ஆம்
தேதி முடிவடைந்து, 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என
போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில்
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட
வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வதித்து போக்சோ
நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக
இவ்வழக்கில் இன்று காலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சந்தோஷ்குமாருக்கு
தற்போது மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடயே உயிரிழந்த சிறுமியின்
தாயார், மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், 'இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ்குமாரைத்
தவிர்த்து மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு உள்ளது.
கடந்த
மாதமே இந்த அறிக்கை வந்தபோது புலன் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை. தான் முன்பே கூறியதுபோல கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு
வாய்ப்புள்ளதால், மீண்டும் இந்த வழக்கை பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க
வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment