
நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சியில் ஆளும் கட்சிக்கு
ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக புகார் கூறிய பொதுமக்கள் வாக்குப்பதிவின்
போது எதிர்ப்பு தெரிவித்தாதல் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி
மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை
நடைபெறுகிறது. இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட புத்தேரி
ஊராட்சியில் காலை முதல் தேர்தல் அமைதியாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,
3-வது வார்டு பகுதியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்
செயல்படுவதாக பொதுமக்கள் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக
வாக்களிப்பவர்களைக் கண்டரிந்து அவர்களிடம் வாக்குப் பதிவுச் சீட்டை மாற்றி
கொடுத்து வாக்குகளை செல்லாத வாக்குகளாக மற்றும் பணியில் அதிகாரிகள்
ஈடுபட்டு வந்ததாக பொது மக்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.
No comments:
Post a Comment